Pages

Sunday, December 19, 2010

ரஜினியா கவுண்டமணியா?

நண்பன் ஒருத்தன் ஒர்குட்ல தாடியோட இருந்த போட்டோவ பார்த்துட்டு உனக்கு தாடி நல்லா இல்லடா, நம்ம தலைவர் ரஜினி மாதிரி ஹேர் ஸ்டைல் வை சூப்பரா இருக்கும்னு கால் பண்ணி சொன்னான். சொன்னது மட்டும் இல்லாம ரஜினி போட்டோவ மெயில் வேற அனுப்புனான். சரி நானும் இவ்வளவு சொல்றானே செய்து பார்ப்போம்னு சொல்லி காலைல எழுந்திரிச்சு முதல் வேலையா கூட இருக்க கொஞ்சம் ஹிந்தி தெரிஞ்ச நண்பன் ஒருத்தன கூட்டிகிட்டு முடி திருத்தகத்துக்கு போனேன். (நமக்கு தான் ஹிந்தி தெரியாதே என்ன பண்ண?) போகும் போதே நண்பா ரஜினி ஹேர் ஸ்டைல்ல வெட்டனும்டா அவன்ட தெளிவா சொல்லிருனு சொல்லிட்டே நடக்குறோம். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நண்பா நீ வா போலாம்னு இழுத்துட்டு போறான்.

கடைசியா கடையை கண்டுபிடிச்சுட்டோம். உள்ள நுழைஞ்ச உடனே சிரிச்ச முகத்தோட வாங்க வாங்கனு ஹிந்தில சொன்னாரு(ஹிந்தி உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). உள்ள அவர தவற யாருமே இல்ல. டேய் நண்பா யாருமே இல்லடா வாடா வேற கடை பார்க்கலாம். அதான் இவர் இருக்கர்லடா போதும் உட்க்கார்டானு மட்டைய கட்டி இறக்கிட்டான். டேய் நேத்து நீ வச்சிருந்த சரக்க நான் குடிசுட்டேன்னு கோபம் எதும் இல்லையே?.ஏன்டா சம்மந்தம் இல்லாம இப்ப அத கேக்குற? இல்லடா அத மனசுல வச்சு பலி வாங்கிறாதடா உன்ன நம்பி தான் மண்டைய குடுக்கிறேன். சரிடா நான் பாத்துக்கிறேன். டேய் அந்த ரஜினி ஸ்டைல் சொல்ற முதல்ல. அவனும் எதோ எதோ சொல்ல கடைசியா பழைய செய்திதாள்ல இருந்து ரோபோ ஐம்பதாவது நாள் படத்த காண்பிச்சான். டேய் இந்த ஸ்டைல் இல்லடா வேற ரஜினி ஸ்டைல்னு சொன்ன அவனுக்கு தெரியல. சரி வேற வழி இல்லாம கூட இருந்தவன அனுப்பி ரூம்ல இருந்த மடி கணினிய எடுத்துட்டு வர சொன்னேன் வஞ்சுக்கிட்டே போயிட்டு வந்தான்.

மெயில் இன்பாக்ஸ் திறந்து நண்பன் அனுப்பிருந்த போட்டோவ காண்பிச்சேன். சரி உக்காருங்கன்னு சொன்னான். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு இவனுக ரெண்டு பேரையும் நம்பி உக்காந்தேன். உட்க்காந்த உடனே எதோ துணி எல்லாம் போத்தி தண்ணி எல்லாம் தொளிச்சு மாவு பிசையா போற மாதிரி ஆரம்பிச்சான். பையா ஒரு நிமிஷம் டேய் நண்பா சொல்லீட்டல்ல ரஜினி ஸ்டைல் தான? அட அமடானு சொல்லிட்டு திரும்ப எதோ ரெம்ப நீளமா ஹிந்தில சொன்னான். டேய் நண்பா இதுல ரஜினி பேரே வரலையடா? டேய் பேசாம உட்க்காருடா சரியா வெட்டுவான். சரி இதுக்கு மேல பேசுனா எந்திருச்சு போயிடுவான்னு சொல்லிட்டு நானும் அமைதியா உட்கார்ந்துட்டேன். அவன் ஆரம்பமே திருப்பதில எடுக்கற மாதிரி சவர கத்திய எடுத்தான். யோவ் யோவ் இருயா!! நண்பா என்னடா இது? அங்க பார்டா பிளேடு மாத்துரார்டா.ஏன்டா பதர்ற? டேய் பக்கத்துலயே இருடா வேற எதும் பண்ண கூடாதது பண்ணிற போறான். சரிடா நான் பக்கத்துலயே நிற்கிறேன்.

சரி நண்பன் தான் பக்கத்துல நிட்க்கிரானு நம்பி திரும்ப உட்க்கார்ந்தேன் தொடக்கத்துலயே மொத்தமா கொத்தா முன்னாடி இருக்க முடிய பிடிச்சான். எனக்கு உயிரே போயிருச்சு.யோவ் யோவ் இருயானு எழுந்திருசுட்டேன். டேய் இப்ப என்னடா? நான் தான் பக்கத்துல இருக்கேன்லடா அடப்பாவி இந்த முன்னாடி முடி வளர்க்க ஒரு வருஷம் ஆச்சுடா. அவன பாத்து வெட்ட சொல்றா. நண்பா அந்த லேப்டாப்ப எடுத்து கண்ணாடி பக்கத்துல வை. அந்த பார்த்துக்கிட்டே அது மாதிரியே வெட்டட்டும் நானும் அப்படியே சரி பார்த்துக்குவேன். நீ என்ன பெரிய வாத்தியாரா சரி பார்க்க. டேய் இது என் மண்டடா நான் தான் எல்லாம். போய் தொலன்னு எடுத்து முன்னாடி வச்சுட்டான்.

திரும்பவும் உட்க்கார்ந்தேன். இப்ப முன்னாடி வேண்டாம் பின்னாடி இருந்து ஆரம்பின்னு நண்பன் அவர்ட சொல்ல அவரும் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு நிமிஷம் வேட்டிகிட்டே இருந்தான். ஒன்னும் புரியல பின்னாடி இருந்த கண்ணாடியும் தெரியல. டேய் அந்த கண்ணாடிய எடுத்து தெரியுற மாதிரி பிடிடானு சொன்னேன். போடனுட்டன் அப்புறம் கெஞ்சி கூத்தாடி சரின்னு ஒத்துக்கிட்டான். ஒரு வழியா பின்னாடி வெட்டி முடிச்சுட்டன். இப்ப வலது பக்கம் காதுக்கு மேல வெட்ட வந்தான் இப்ப தான் நல்லா கவனிக்குரேன் அவன் கை பயங்கரமா நடுங்குது.அடப்பாவி இருடான்னு சொல்லி மறுபடி எழுந்துரிச்சேன். நண்பன் ஒரு கைல கண்ணாடியோட இப்ப என்னடா? நண்பா அவன் கை பயங்கரமா நடுங்குது காத போட்டர போறான்டா. டேய் அதெல்லாம் நடக்காது நான் பர்துக்கிரேண்டா? என்ன பார்ப்ப காத வெட்டுனதுக்கு அப்புறம் எப்படி வெட்டுனான்னா? போதும்டா சாமி ரஜினி ஹேர் ஸ்டைல் இல்லாமகூட இருந்திறலாம் ஆனா காது இல்லாம அம்மாடியோவ் ஆள விடுடா. டேய் பாதி வெட்டி பாதி வெட்டாம? என்னது பாதி வெட்டிட்டானா? டேய் முடிய சொன்னேன்டா உட்க்காருடா. அப்படினா ஒரு சின்ன வேண்டுகோள். இப்ப என்னடா? அவன் அந்த சவர கத்திய உபயோகபடுத்தக்கூடாது. பின்ன எப்படிடா சவரம் பண்றது? அந்த ட்ரிம்மர் மெசின்?

சரி இப்ப எல்லாம் முடிஞ்சு முன்னாடி வந்தான். திரும்பவும் கொத்தா நிறையா முடிய பிடிச்சான் திரும்பி நண்பா ஒரு வருஷம்டா. மெதுவா வெட்ட சொல்டா வெட்டிட்டா வளர வேற செய்யாதுடா. சரிடா திரும்பு சாவடிக்காத. மறுபடியும் நிறைய முடிய பிடிச்சான் திரும்பி சொல்லலாம்னு பார்த்த திரும்ப முடியல பார்த்த இவனும் அவனும் கூட்டு சேர்ந்து தலைய இவன் அழுத்தி பிடிக்க அவன் கதற கதற வெட்டி முடிச்சுட்டன்.

கடைசியா லேப்டாப்ல ரஜினி தெரியுறாரு கண்ணாடிய பார்த்தா கரகாட்டக்காரன் கவுண்டமணி இருக்காரு. அடப்பாவிகளா கதாநாயகன் மாதிரி வெட்ட சொன்ன காமெடியன் அக்கிட்டீங்கலேடா. போங்கடா டேய் இதுக்கு லேப்டாப் வேற நாலு கண்ணாடி வேற அப்படின்னு கிளம்புனா. கடைக்காரன் முறைக்குறான் சரி நம்ம பண்ண அலும்புக்கு தான் முறைக்குறான்னு பார்த்தா வெளிய போற வழிய மறைக்குறான் என்னன்னு கேட்ட எதோ ஹிந்தில விறான் நண்பன்ட்ட என்னனு கேட்ட காசு கேட்க்குறாண்டா. எவ்வளவுடா முன்னூறு ரூபா டா இந்த கவுண்டமணி கட்டிங்க்க்கு இது வேறயா தமிழ்ல திட்டிக்கிட்டே கொடுத்தேன். அவன் என் நண்பன்ட்ட எதோ ஹிந்தில சொல்லிட்டு இருந்தான் நான் நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

வெளிய வந்த உடனே நண்பா அவன் உண்ட எதோ சொல்லிட்டு இருந்தனே என்னடா அது? அத விடு நண்பா. ஏன்டா எதும் கெட்ட வார்த்தையா? இல்ல நண்பா வேகமா நட. அட சும்மா சொல்டா. உனக்கு முன்னாடி ஒரு குழந்தை முதல் தடவை முடி வெட்ட வந்துச்சாம் அது கூட இந்த அளவுக்கு இம்சிக்கலன்னு சொன்னனடா. போடா டேய் குழந்தைக்கு அதும் பட்னா குழந்தைக்கு ரஜினி தெரியுமா கவுண்டமணி தெரியுமா? அதும் இவன் கடைக்கு நம்மள தவற வேற ஆளா உன்ன ஏமாத்துறான் நண்பா. அந்த குழந்தைக்கு ரஜினி தெரியுமோ கவுண்டமணி தெரியுமோ தெரியாதுடா. ஆனா உன்ன மாதிரி இம்சிக்க தெரியாதுடா. அது மட்டும் இல்ல இன்னொன்னும் சொன்னான் உன்ன இனிமே இந்த பக்கம் அந்த லப்டோப்போட பார்த்தான் சவர கத்திய நடு மண்டைல நச்சின்னு இறக்கிருவேன்னு சொல்லிருக்கன். போடா டேய் போடா. ரூம திறந்து உள்ள போலாம்னு பார்த்தா எல்லாரும் மொத்தமா எதிர் பார்த்து நின்னு சிரிக்கிராணுக. இவன்தான் லேப்டாப் எடுக்க வந்தப்ப எல்லாருட்டையும் சொல்லிட்டு வந்திருக்கான். கால்ல இருந்த செருப்ப எடுத்துட்டு விரட்டுனா....

Karthik

சிரிச்சாச்சா போங்கயா பொய் கருத்து குத்து குத்திட்டு பிள்ள குட்டிகள படிக்க வையுங்க..

Monday, November 1, 2010

அறியாத வயதில் புரியாத வெற்றி..

முஸ்கி : சில இடங்களில் வாசிக்க கடினமாக இருக்கும், எதார்த்தத்தை கொண்டுவர முயன்றிருக்கிறேன். தவறு இருந்தால் பின்னூட்டத்தில் கூறவும்.

நான் சிகரெட்டை அனைத்து விட்டு உள்ளே நுழைய, போர்வையை விளக்கி கொண்டு டேய் நண்பா விடிஞ்சா மேட்ச்டா, போன வருஷம் நம்ப இதே பைனல்ல இதே 10th டீம்ட தோத்துட்டோம் என மெல்ல ஆரம்பித்தான் ஆனந்த்.. வெண்ண தூங்குடா, காலைல எழுப்புன உடனே எழுந்திரிக்கல செத்த. விடு நண்பா அதெல்லாம் எழுந்திரிசுருவான் என தடுத்தான் ராஜேஷ். கிழிச்சான் இன்னைக்கு என்னடா ஆச்சு? பிளான் என்னடா நாலுமணிக்கு போய் ப்ராக்டிஸ். எத்தன மணிக்குடா கிரௌண்டுக்கு வந்தான். சொல்ற வெண்ண. விடுடா டேய் நீ தூங்குடா என போர்வையை விரித்தான் ராஜேஷ். படுத்துகொண்டே டேய் கார்த்தி நான் எப்படி நம்ம டீம்ல சேர்ந்தேன் நியாபகம் இருக்கா? இருக்குடா மறக்க முடியுமா அத. அப்ப தாண்ட ஊர்ல இருந்து வந்தேன். நைட் ஸ்டுடி ஆரம்பமாயிருச்சு. கதவ பூட்ட போனணுக சண்ட போட்டு உள்ள வந்து உட்கர்ந்தா. நம்ம வாடன் இன்பா வந்துட்டாரு. புக்க தேடுனா எல்லாம் பெட்டிக்குள்ள இருக்கு ஊருக்கு போகும்போது பூட்டிட்டு போனது. அப்ப தான் ஒரு நோட்ட குடுத்து காப்பதுன. நானும் வேகமா வாங்கி படிக்கிற மாதிரி நடிச்சா அது எழுதாத நோட்டு. அவர் போனதும் தான் கேட்டேன் யாருடா நீ பெட்டிய என் பக்கத்துல வச்சுருக்க?

Cricket

அப்ப தான் சொன்ன நான் புதுசு வேற ஸ்கூல்ல இருந்து வந்துருக்கேன்னு. காலாண்டுக்கு அப்புறம் ஏண்டா? அங்க கொஞ்சம் பிரச்சன... என்னடா ஏதும் பிட் அடிச்சு மாட்டிகிட்டியா? இல்ல, பின்ன? ஒரு பையன அடிச்சுட்டேன். அட பெரிய ஆளா இருப்ப போல. சரி சண்ட போட்டதுக்க வெளிய அனுப்புனாணுக.ஆமா H.M ரூம்ல வச்சு அவர் பையனையே அடிச்சுட்டேன்ன. டேய் அப்பவே உன்ன பார்த்த கொஞ்சம் பயம். ஏன்டா அடிச்சா? என் நண்பன் பேசுனதுக்கு போர்ட்ல பேர் எழுதி போட்டண்டா அதான். சரின்னு பசங்க எல்லாம் இந்த வாரம் லீக் ஆரம்பிக்குது நண்பா நாளைக்குள இருந்து ப்ராக்டிஸ் பண்ணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம ரூம்ல மொத்தம் 10 பேர்தான் இன்னும் ஒருத்தன் மதன் அவன் பக்கத்துக்கு ரூம். அவன சொல்லி வரசொன்னா. அவன் நான் லேட்டா வரேன் சொல்லிட்டான். டேய் நம்ம தான் 8th மெயின் டீம், நம்ம டீம்ல சேர அவன் அவன் அலையுறான் இவன் என்னடானா.சரி விடுடா இந்த மேட்ச் பார்போம் இல்ல நம்ம B டீம் ஜெகன எடுத்திருவோம்டா. சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி நீ வந்து நான் வரேன்டனு சொன்ன. பசங்க எல்லாம் என்ன ஒருமாதிரி பாத்தானுக. டேய் நான் ஒன்னும் சொல்லலடா அவனா தான் கேக்குறான் போல.. சரியா சாப்பிட பெல் அடிச்சுது தப்பிச்சோம் பிளச்சோம்னு ஓடிட்டேன். அங்க சாப்டர இடத்துல பார்த்த பக்கத்துல நீ? ஏன்டா ஊர்ல இருந்து வந்தோம்னு ஆயிடுச்சு???

சாப்ட்டு தட்ட ரெண்டு பேரும் கழுவீட்டு நடக்கும் பொது நீ கேட்ட நான் உங்க டீம்ல ஆடுரேன்னு சொன்னதுக்கு அவனுக ஏண்டா உன்ன முரச்சாணுக? டேய் இங்க 8th A டீம் B டீம் Main டீம்னு மூணு இருக்கு. மத்த ரெண்டு டீம்ளையும் நல்ல அடுரவுங்கள மெயின் டீம்ல எடுத்துப்போம். மெயின் டீம் மட்டும் தான் மத்த கிளாஸ் மெயின் டீமோட ஆடனும். மத்த டீம்லாம் உள்ளுக்குலயே ஆடிப்பாணுக.
இப்ப நம்ம ரூம்ல இருக்க 10 பேருமே 8th மெயின் டீம்ல இருக்கோம் மதன் மட்டும் தான் வேற ரூம். அதுக்கே வாடன், மத்த ரூம் பசங்க எல்லாம் கடுப்புல இருக்கானுக. நம்ம ஜெயிகனும்னு நினைக்கறது நம்ம 10 பேர் மட்டும் தான் இப்ப நீயும் ஒருத்தன் ஆனா நம்ம தோக்கணும்னு மத்த எல்லாரும் நினைக்குராணுக. இப்ப போய் நீ நேர மெயின் டீம் வரேன்னு சொன்ன அதும் நம்ம ரூம்ல இருந்து. அதும் என்ன வேற பாத்துக்கிட்டே சொன்னியா அதான் எல்லாரும் என்ன சந்தேக படுராணுக. இல்லடா நான் வந்த உங்க டீமா ஜெயிக்க வச்ருவண்டா. டேய் இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலையா? என் தட்ட கொண்டு போ நான் உச்சா போயிட்டு வரேன்..

அப்புறம் நீ ரூம்ல போய் எல்லாருட்டையும் தனி தனியா இதே டயலாக் சொல்லிருக்க. உன்ன எப்படியோ சரிகட்டி வச்சோம் ஆனா நல்ல உதவி பண்ணடா எல்லா நேரத்துலயும். நீ எங்க ரூம்னால உன்ன எந்த டீம்ளையும் எடுத்துக்கல. ஒரே கிளாஸ் வேற பக்கத்துலயே இருப்ப. கஷ்டமா இருக்கும். நான் மெயின் டீம்ல சேர தம்மடிச்சு பலகுனேன். நீ என்கூட சேர தம்மடிச்சு பழகுன. லீகுல லாஸ்ட் மேட்ச் நம்ம அதுக்கு முன்னாடியே செமிஸ்க்கு செலக்ட் ஆயிட்டோம். நான் ஊருக்கு போய்டேன் நம்ம உதயா கேப்டன், ஜெகன் மதன் எல்லாரும் டீம்ல இருக்கனுகனு நான் கிளம்பிட்டேன். மதன் அந்த பொண்ணு பிரச்சனைனால வர மாட்டேன்னு சொல்லிட்டான். அப்ப தான் உதயா எங்க கடைக்கு S.T.D பண்ணி கேட்டான் நான் தான் உன்ன எடுத்து ஆட சொன்னேன். வாடனுக்கு நம்ம மேல செம கடுப்பு அவர் மாப்பிளைய எடுக்கலைல.மேட்ச் முடிஞ்ச உடனே நீ கூப்டப்ப நான் கடைல இல்ல அப்பாட்ட சொல்லிருக்க அப்பா கார்த்தி டீம் ஜெயிசுருசுனு. நான் வீட்டுக்கு வந்த எங்கப்பா ரெண்டு டோஸ் விட்டாரு. அப்பறம் பூத்ல இருந்து வாடனுக்கு பண்ணி கேட்ட 220 சேஸ் பண்ணி ஜெயிசுட்டீங்கனு சொன்னாரு. நீ 82 ரன்னு அதுல 4 சிக்ஸ்னு வேற சொன்னாரு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனிமே நம்ம ரூம் தாண்டா மெயின் டீம்னு.வந்து கேட்ட உதயா உன்ன புகல்றான் மச்சி அவன் 3 விக்கெட் ,82 ரன்னு அதும் உன் பேட்ட வச்சுடான்னான்.உடனே மதன தூக்கிட்டு உன்ன எடுத்தோம்.இலியாஸ் "டேய் வெண்ணைகளா அவன சொல்லிட்டு நீங்க கத பேசிட்டு இருக்கீங்களா மூடிட்டு படுங்கடா". "ஆமா நண்பா வா ஒரு தம்ம போட்டு வந்து படுப்போம்". டேய் சும்மா சும்மா தம்மடி அப்புறம் ரெண்டாவது ரன்லயே முக்கு. விடுடா பாத்துக்கலாம்...

10th டீம் பற்றியும் பைனல்லும் நாளைக்கு..(தொடரும்)

Sunday, October 10, 2010

நான் ஒன்னும் பன்னலம்மா!

Child Friends

கார்த்தியும் ராஜேஷும் மூச்சு முட்ட ஓடிவர வீட்டிற்குள் நுழைந்ததும், கார்த்தி அம்மா ஏண்டா டேய் மெதுவா வாங்கடா விழுந்துட்டீங்கனா? போய் முகத்த கழுவிட்டு வாங்க சாப்டலாம். கார்த்தி மெதுவாக இல்லம்மா அது.... உடனே அம்மா டேய் என்னடா ராஜேஷ் வீட்ல எதும் சாப்டிங்களா? போங்கடா போயிட்டு சீக்கரம் வாங்க. அதற்குள் ராஜேஷ் அம்மா "ஓடவா செய்றீங்க உங்க ரெண்டுபேரு காலையும் உடைச்சு போடணும்டா" என உள்நுழைய. கார்தியம்மா கேட்டிங்களா அவனுக என்ன பன்னானுகனு நீங்க அவனுகளுக்கு நல்லா இப்படி சாப்பாடு போடுங்க அவனுக இன்னும் நல்ல சேட்ட பண்ணட்டும். எண்ணக்க என்ன பன்னாணுக? அவனுகட்டயே கேளுங்க. டேய் என்னடா பண்ணீங்க? அம்மா அதுவந்து..

டேய் ராஜேஷ் நீ சொல்ற அவன் கிடக்கான். அம்மா என்று திருதிருவென்று விழிக்க. டேய் சொல்லுங்கடா. அம்மா நாங்க எப்பவும் விளாடுரமாரி நம்ம முனியாண்டி கோவில்ட விளையாடிட்டு இருந்தமா, அப்பபப.. டேய் சொல்லுங்கடா. நான் ஒரு பந்த சாக்கடைக்குள்ள அடிசுட்டேம்மா. சரி இதுக்கா பசங்கள திட்டுற?அதுமட்டுமா மேல சொல்லுங்கடா.. டேய் என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்கடா. இல்லம்மா அப்பறம் கார்தியடிச்ச பந்து அசோக் மேல பட்டு அவனும் சாக்கடைல விழுந்துட்டாம்மா. அவன தூக்க போனா அவன் உன்னால தான்னு சொல்லி கல்லால அடிச்சுட்டு ஒடுனனா, இவனும் கல்லால திரும்ப அடிச்சான் அது அஞ்சாநம்பர் வீட்டு கண்ணாடில பட்ட்ருசுமா.. டேய் மேல அடிஎதும் பட்ட்ருக்காடா? என உடலை அம்மா துழாவ , அப்பறம்? கார்தியம்மா என்ன கதையா கேக்குறீங்க?

விடும்மா ஒரு கண்ணாடி தான வாங்கிகொடுத்துருவோம். டேய் இனிமே பார்த்து விளாடனும் சரியா? சரிம்மா.. கார்தியம்மா அத விடுங்க எங்க வீட்ல என்ன பன்னானுகனு கேளுங்க? என்னடா இது? இல்லம்மா நாங்க மேல பட்ருந்த சாக்கடைய கழுவ தான் போனம். அதுக்குள்ள பால்காரன் வந்தான். அவன்ட வாங்கி வைக்கும் பொது ராஜேஷ்தம்மா கொட்டிட்டான். அப்பரம் அத தொடச்சுட்டு அதே அளவுக்காக கொஞ்சம் தண்ணி ஊத்த சொன்ன இவன் நெறையா ஊத்திட்டம்மா. சரி கொஞ்சத்த கீழ ஊத்திட்டு வைக்கலாம்னு ஊத்துனோம் அப்ப இவன் தம்பி கோபி பார்துட்டாம்மா. அப்ப அவன் பால கீழயா ஊத்துறீங்க அம்மா வந்ததும் சொல்ரேன்டின்னு சொன்னான். சரி சரி விடும்மா இங்க பால் இருக்கு எடுத்து போய் காபி போடு விடும்மா. இனிமே இப்படி பன்னதிங்கடா.. இப்ப சாப்டலாம் வாங்க..

கார்தியம்மா முழுசா கேளுங்கா சொல்லுங்கடா என்ன பண்ணீங்கனு. அம்மா அப்ப கோபிட்ட சொல்லாதடா உனக்கு என்ன வேணுனாலும் தரோம்னு சொன்னோம்,அவந்தம்மா அந்த கிரைண்டர்ல உக்காந்து சுத்தனும்ன்னு சொன்னான். டேய் என்னடா பண்ணிங்க அம்மா பதட்டத்துடன். இல்லம்மா அந்த மாவு தள்ளும்ல அதையும் இன்னொன்னு பெருசா இருக்கும்ல அதையும் மூணு பேரும் சேந்து வெளிய போட்டுட்டு அவன உட்க்கார வச்சு சுச்சு போட்டம்மா அப்ப தான் ராஜேஷ் அம்மா வந்தாங்க வந்த உடனே சுச்ச அமத்திட்டு அவன தூக்கி எதோ பாத்தாங்க. பாத்துட்டு எங்கள அடிக்க வந்தாங்க அதன் வேகமா ஓடிவந்தோம். மலரு கோபிக்கு எப்படி இருக்கு என்று இடுப்பில் வைத்திருந்தவன வாங்க. எருமைகளா அறிவு இல்ல எது எதுல விலாடராதுன்னு.. அப்பா வரட்டும் உங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் ஆஸ்டல்ல சேத்ததான் சொன்ன படி கேப்பீங்க. அம்மா ஆஸ்டல் வேண்டாம்மா நாங்க இங்கயே இருக்கோம் இனிமே சேட்ட பண்ண மாட்டோம் என அழ.. சரி போய் தட்ல சோறு போட்ருக்கேன். போய் சாப்பிடுங்க சரியா? சரிம்மா.

வா மலரு சின்ன பசங்க தான எல்லாம் சரியாயிடும்.. என சொல்லிகொண்டே மெல்ல நடந்தனர் (தொடரும்)..

Thursday, April 29, 2010

என் வாழ்விலும் ஒரு வசந்தம்

அன்று 6/1/2007 அதிகாலை (09.30 மணி) என்றும் போல் விடிந்தது. நானும் எப்போதும் எழுந்து தேடுதல் வேட்டையை துவங்கினேன்(சிகரெட்டை). கடைசியில் இரவு ஓளித்து வைத்திருந்த ஒரு சிகரெட்டை புகைத்து கொண்டு காலை கடன்களை முடித்து விட்டு கிளம்பினோம்(நன்,முத்து மற்றும் குமார்). சென்னையில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தோம் மதுரைக்கு(வீட்டுக்கு).முத்து "டேய் சீக்கிரம் கிளம்புட என்றான் " . எப்போதும் போல் கடைசியாக குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு நண்பர்களிடம் திட்டும் வாங்கிவிட்டு ஆட்டோவில் ஏறி எக்மோர் என்றேன் .முத்து "அண்ணா வேகமாக என்றான்".டிக்கெட் ஏற்கனவே புக் பண்ணியதால் அதில் ஏதும் பிரச்னை இல்லை.

ஆட்டோவில் இருந்து இறங்கிய முத்துவும்,குமாரும் சிகரெட் கூட வாங்காமல் வேக வேகமாக உள்ளே சென்றனர்.ஒன்றும் புரியாமல் நானும் தொடர்ந்தேன்(சிகரெட்டை வாங்கிக்கொண்டு). வேகமாக போனவர்கள் S3 பெட்டியில் ஒட்டியிருந்த பயணிகள் பட்டியலை பார்த்தனர். முத்து "நண்பா ஒன்னு தாண்டா" என்றான். குமார் "டேய் நல்ல பாருடா ரெண்டு டா" என்றான். "அப்பாட சூப்பர் டா! "என்று இருவரும் பெருமூச்சு விட்டனர். நான் ஒன்றும் புரியாதவனாய், கோபமாய் "என்னடா ஒன்னு,ரெண்டு? தம் கூட அடிக்காம என்னடா அவசரம்" என கேட்க முத்து " நண்பா நம்ம கூட ரெண்டு பொண்ணுக வர போறாங்கடா" என்றான். சிரித்துக்கொண்டே சீட்டை தேடி அமர்ந்தோம்(வைகை எக்ஸ்பிரஸ்). முத்துவும் குமாரும் பேட்டியின் இரண்டு வாசலிலும் நின்று கொண்டு அந்த பெண்களின் வருகைக்காக காத்திருந்தனர்.இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது இரு பெண்களும் வர வில்லை. எதோ சிட் பண்டில் போட்டு ஏமாந்தவர் போல வந்து அமர்ந்தனர். சற்று எங்களுக்குள் சலசலப்பு. நான் " டேய் அவளுக டிக்கெட் கான்செல் பன்னிருப்பாள்கடா " என்றேன். முத்து " confident மச்சி confident " என்றான்!!!.குமார் "என்னடா பயணிகள் பட்டியலில் பெயரும் வயசும் மட்டும் தான் போடுறாங்க! ஏன்டா எங்க ஏறுவாங்க எங்க இருந்குவாங்கனு போட்ட ஈசிய இருக்கும்ல " என்று இரயில்வே துறையை திட்டினான். நான் பதிலுக்கு "அட்ரஸ்,போன் நம்பர் போட்டிருந்தால் இன்னும் வசதியா இருக்கும்ல " என்று மொக்கையை போடா இருவரும் முறைத்தனர்.இதற்கு மேல் இருந்தால் அடிவிழும் என்று "நண்பா நான் ரெம்ப நேரமா தம் அடிக்கலடா இந்த வந்துரேன்" என்று மெல்ல டோயலேடுள் நுழைந்தேன். தம்மை முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் ஒரு அழகிய தேவதை(கொஞ்சம் பழசுதான் பொறுத்துக்கோங்க!) அமைதியாய் தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தால். சிகரெட்டும் முடிந்தது நானும் முடிந்தேன்.மெல்ல இருவரையும்(குமார்.முத்து) பார்த்தால் வாயில் இருந்து அருவியாக ஜொள் ஓடிக்கொண்டு இருந்தது. மூவருவியாக நானும் சேர்ந்து கொண்டேன்.

மெல்ல அவளை ரசிக்க ஆரம்பித்தேன். வெள்ளை நிற சுடிதார் அனால் அது அப்படி ஒன்றும் வெண்மையாக இல்லை. ஏனென்றால் அவள் அதை விட கலராக இருந்தால். சிறிது முடி முன்னால் வந்து விழ அவள் அதை சரி செய்வது பாலில் தேன் விழுந்து மறைவது போல் அழகாக இருந்தது. மிகவும் எளிமையாக இருந்தால். ஒரு வேலை அது தான் என்னை கொன்று விட்டதோ என்று தெரியவில்லை.
கழுத்தில் ஒரு சின்ன செயின். காலில் ஒரு சின்ன அழகான கொலுசு அவ்வளவுதான். நான் எங்கே இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை அனால் சந்தோசமாக இருக்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. நடந்து போகும் யாராவது அவளை உரசினால் என்னை அறியாமல் எனக்கு கோபம் வருகிறது கையை இறுக்கி மூடிக்கொள்கிறேன் (கில்லி விஜய் போல). ஒருமணி நேரம் போனது தெரியவில்லை

குறட்டை சத்தம் என்னை வெகுவாக தொந்தரவு செய்ய திரும்பி கோபத்துடன் பார்த்தால் முத்துவும்,குமாரும் இரயில் சத்தத்தை விட அதிகமாக போட்டி போட்டுகொண்டு குறட்டை. நான் விடவில்லை திரும்ப அவளை உற்று கவனிக்க ஆரம்பித்தேன்(ஜொள்). ஒரு சிறிய வருத்தம் அவள் ஒரு முறை கூட ஒரு கண்ணில் கூட ஒரு கல்லை பார்ப்பது போல் கூட பார்க்க வில்லை. நான் விவேகானந்தர் பொன் மொழியான "எதற்கும் கலங்காத நம்பிக்கை எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும்" என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்தேன். “இப்படியே இரண்டு மணிநேரம் சென்றது இரண்டு நொடி போல”. அப்போது தான் எழுந்தான் வில்லன் முத்து "நண்பா தம் குடுடா" என்றான். வண்டியில் இருந்து வழுக்கி விழுந்தவன் போல அவளை பார்த்துக்கொண்டே மெல்ல மறைத்து எடுத்து கொடுத்தேன். முத்து அதற்கு "பாக்கெட் வேண்டாம் டா ஒன்னு குடு போதும்" என்றான். "முதல்ல எழுந்து போடா "என்றேன் கோபமாக. கெட்டதிலும் ஒரு நல்லது போல "அவள் ஒரு சிறு புன்னகை பூத்தல்!". அப்போது தன எனக்கு தெரியும் அவளும் என்னைப் பார்க்கிறாள் என்று. மனதிற்குள் எதோ "சாவின் விளிம்பில் இருந்து உயிர் பிழைத்தது போல் ஒரு திருப்தி."
வந்தவன் மறுபடி தூங்கிவிட்டான். அழிந்தான் வில்லன் என்று நானும் என் ஆஸ்தான வேலையை தொடர்ந்தேன். அவள் அவ்வப்போது திரும்புவதும் என்னை பார்ப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக கூடியது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்திய T20 உலகக் கோப்பையை ஜெயித்த பொது எப்படி(சந்தோசமா) இருந்ததோ அப்படி இருந்தது. நேரமாக நேரமாக எதோ நன் இழந்து கொண்டே போவது போல் உணர ஆரம்பித்தேன். வந்தான் இன்னொரு வில்லன் ஒரு 35 வயது இருக்கும் பேச ஆரம்பித்தான் பேசினான் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான் அவள் என்னை பார்த்துக்கொண்டே அவனிடம் பேசிக்கொண்டு இருந்தால். அவள் போனில் பேசுவது போல என்னை தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாள். அப்போது தன நியாபகம் வந்தது நன் கடைசி 4 மணி நேரமாக நான் தம்மடிக்கவே இல்லை, சாப்பிடவும் இல்லை.

மதுரை நெருங்க இரண்டு மணி நேரம் இருந்தது அவள் எதிரில் இருந்த குழந்தையுடன் விளையாடுவது போல்(நான் இல்லங்க வேற குழந்தை) மெல்ல என்னை தொடந்து பார்க்கவும் சிரிக்கவும் ஆரம்பித்தாள். திடிரென்று எழுந்து அருகில் வந்தால் என் முகம் வேர்த்து விட்டது. கிட்ட வந்து அவள் பையை எடுத்து அமர்ந்தாள். எனக்கு வியர்த்ததை பார்த்து சிரித்துக்கொண்டே காலனியை சரி செய்தல் ஒன்றும் புரியாதவனாய் நான் விழிக்க வந்தது திண்டுக்கல் இரயில் நிலையம். திடிரென்று என்னைப் பார்த்துக்கொண்டே தங்கை மற்றும் அப்பாவுடன் இறங்கினாள். நான் படி வரை சென்று எதோ இழந்தவன் போல பார்த்துக்கொண்டே இருக்கிறேன் மெல்ல இரயில் நகர்ந்தது. எதோ ஒரு பெரிய இழப்பு, மனதில் ஒரு வித பாரம். என்ன செய்வது என்று தெரியாமல் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. கைக்குட்டை வைத்து மறைத்துக்கொண்டே டோயலேட்டுள் நுழைகிறேன். தொடர்ந்து நான்கு சிகரெட் பிடிக்கிறேன். பின் வேறு வழியின்றி சீட்டில் வந்து அமர்கிறேன். அப்போதும் முத்துவும்,குமாரும் தூங்குகின்றனர். என்னிடம் அந்த 35 வயதுள்ளவன் மொக்கையை போடுகிறான். வேறு வழியின்றி திட்டவும் முடியாமல் அழவும் முடியாமல் பதில் சொல்லிகொண்டே இருக்க கேட்டான் ஒரு கேள்வி "தம்பி என்ன பண்ணிற்றிந்கீங்க?". நான் "இன்ஜினியரிங் 3rdrd இயர் " என சொல்ல. "எந்த டிபர்ட்மென்ட் "என்கிறான். "யோவ் IT யா " என்றேன். சொன்னான் ஒரு தெய்வீக வழி "தம்பி இங்க உட்கார்ந்திருஞ்சுல ஒரு பொண்ணு" (நான் ஆவேசமாக) ஆமா "அதுவும் இன்ஜினியரிங் தானம்பா" என்றான். "அண்ணா எந்த காலேஜ்னா?" என்றேன் அது "PSNAPSNA காலேஜ்பா 2nd இயர் படிக்குதுப்பா." ஐயோ வெளிச்சம் கூட ஆரம்பித்தது. நான் மறுபடியும் "அண்ணா எந்த டிபர்ட்மென்ட்னா" என்றேன். "அதுவும் IT தம்பா" என்றான்.சந்தோசம் தாளாமல் இருவரையும் எழுப்பி இதை சொல்லி இம்சித்து மீதமிருந்த சிகரெட்டையும் முடித்தோம்.

மீதத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!!

Wednesday, April 21, 2010

ஒரு குட்டி ஆசை!

அன்று (31/05/2009) சரியாக மாலை நாலரை மணி Yahoo Email Alerter வேளையில் முங்கி இருந்த முருகனை தட்டி எழுப்பியது. வெளியில் வந்தவன் (எங்கிருந்து என்று கேட்டல் அடி தான்) மெல்ல அந்த மின்னஞ்சலை பார்த்தான் அதில் உங்கள் வங்கி கணக்கில் 12,024 வந்துள்ளது என அறிவிப்பு வந்தது. திடிரென வேலை செய்தது போதும் என்று அதை மூட்டை கட்டி வைத்துவிட்டு(கணினியை அமர்த்திவிட்டு) தன்னுடைய shoe மற்றும் tie சரிசெய்துவிட்டு சுற்றி இருந்த நண்பர்களுக்கு bye சொல்லிவிட்டு கிளம்பினான்.

வெளியில்வந்தவன் wallet இல் எதோ தேடினான். தேடியதை கண்டுகொண்டவன் போல மெல்ல நடக்க துவங்கினான். அப்போது அவனுடைய பழைய நினைவுகள் மனதிற்குள் ஓட துவங்கின(இங்கு சக்கரம் எல்லாம் சுத்த முடியாது). சரியாக 13 வயது அவனுடைய தாய்மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஒரு அரசியல்வாதி அனால் முருகனுடைய அப்பா ஒரு சாதாரணமான பெட்டிக்கடை அம்மா அவ்வப்போது அப்பாவிற்கு உதவி செய்து கொண்டே வீட்டை பார்த்துக்கொள்வார். அனால் அவனுடைய மாமா மாணிக்கம் கொஞ்சம் வசதி படைத்தவர்(தலைக்கனத்திலும் கூட). அவர் வீட்டிற்கு வரும்போது கையில் ஒரு பெப்சி குளிர்பானம் பாட்டிலுடன் வந்தார். முருகனும் சரி அவன் தம்பியும் சரி முதன் முதலில் அதனை இப்போது தான் கிட்டத்தில் பார்க்கின்றனர். அவன் தம்பி குறும்பன், முருகன் காதில் எதோ முனுமுனுக்கிரன். இருவரும் தன்னை அறியாமல் சிரித்துக்கொள்ள அவர் மாமா, அத்தை இருவரும் அம்மாவிடம் எதோ பேசி கொண்டே இவனிடமும் எதோ கேட்கின்றனர் இவனும் எதோ சொல்ல ஆனால்இவன் கவனம் முழுதும் அந்த பாட்டில் தான்.

அதற்குள் அவன் SBI ATM நெருங்கிவிட பின் பாக்கெட்டை நொண்டி கொண்டே உள்ளே நுழைகிறான். கார்டை எடுத்து உள்ளே திணிக்க **** என்று எண்ணை அழுத்தி 100 ருபாய் எடுத்து வருகிறான். அவன் அந்த நோட்டை நன்றாக இரண்டு விரல்களால் தடவி கொண்டே(முதல் சம்பளம் அல்லவா) அருகில் இருந்த பெட்டி கடைக்கு போகிறான்(தம் அடிக்க இல்லங்க). "அண்ணாஒரு அரை லிட்டர் பெப்சி குடுங்கனா ,நல்ல கூலா" என்கிறான். அவன் அதை அவசர அவசரமாக வாங்கி பதட்டத்துடன் திறக்க அது பொங்கி கொஞ்சம் கிழே சிந்த, கொஞ்சம் பொறுமையாக கொஞ்சம் வேகத்துடன் (அது எப்படின்னு கேட்டக்திங்க) தான் வாயில் ஊற்றினான்(ஏன் இந்த பதட்டம்!). மெல்ல அந்த பெப்சியை உற்று பார்த்துக்கொண்டு மெல்ல பழைய நினைவுகளை உருட்டுகிறான்.

ஆசையாக அவனும் அவன் தம்பியும் ஒரு டம்ளரை எடுத்துகொண்டு ஓடி போய் அவன் மாமாவிடம் "மாமா கொஞ்சம் குடுங்க மாமா!" என்றான். அவர் நீ சின்ன பையன் இதெல்லாம் சாப்பிட கூடாது என்று ஏமாற்றுகிறார். அவர் கையில் சிறிது பெப்சி கொட்டிவிட கை கழுவ செல்கிறார். இவன் அருகில் சென்று உற்றுப்பர்த்து கொண்டு இருக்க மாமா "ஏன்டா திருடவ செய்ற?" எனகூற அம்மா வந்து ஒரு அடி வைக்கிறார். அன்றிருந்து அவன் பெப்சி என்றல் ஒரு வெறுப்பு அவன் மாமாவை போல. அன்று இரவு முழுதும் அழுது இறுதியில் "என் பணத்தில்(சம்பளத்தில்) தான் நன் இனி பெப்சி குடிப்பேன்!" என்று ஒரு உறுதி எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்கிறான்.பெப்சி பார்க்கும் பொழுது எல்லாம் அவனுக்கு இதே நினைப்பு தான். இப்போது அவன் முதல் சம்பளத்தில் பெப்சி குடித்துக்கொண்டு இருக்கிறான். அதே நேரம் அவன் கண்களில் இரண்டு சொட்டு கண்ணிர் வர அதை பார்த்த கடைக்காரர் "தம்பி நீதான் நல்ல கூலா கேட்ட இப்ப பாரு கண்ணிர் வருது!" என்கிறார். அவன் அப்படியே அவரை பார்த்து சிரித்து கொண்டே நடக்க ஆரம்பிக்கிறான்.